BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Friday, July 18, 2008



நான் பார்த்த பெண்களில்
தேவதை நீ தான்
(காதல் எனும்)
வரம் தந்தாயே...!

இனியொரு விதி செய்வோம்


நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எழுதியது

இறைவன் அருளால் உயிர் பெற்றோம்
அவனது அன்பால் உருவுற்றோம்
சிந்தனை என்னும் திறன் பெற்றோம்
புன்னகை என்னும் வரம் பெற்றோம்

குயில்களுக்கு இசை புரியும்
நாய்களுக்கு மோப்பம் தெரியும்
மயில்கள் எல்லாம் நடனம் முயலும்
நம்மால் மட்டுமே புன்னகை இயலும்

உழைத்து சேர்ப்பதை எறும்புகள் புரியும்
தின்று கொழுப்பதை பன்றிக்கும் முடியும்
பகைவனை அழிப்பதை மிருகங்கள் செய்யும்
மனிதர்கள் நாம் நண்பர்கள் செய்வோம்

தோல்வி இன்றி இறப்பவன் சாதனையாளன்
வறுமை இன்றி இறப்பவன் உழைப்பாளி
ஆசையின்றி இறப்பவன் ஞானியாவான்
பகைவனின்றி இறப்பவன் இறைவனாவான்

ஊருக்கும் உலகுக்கும்
நண்பனாய் வாழ்ந்து நண்பனாய் இறப்போம்
நட்பை வளர்த்து நண்பர்கள் சேர்ப்போம்

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது அவசியம்
அதை விட அவசியம்
"நாளுக்கொரு நண்பனை தேடிப் பிடிப்பது"

நாளுக்கொரு நண்பனை தேடிப் பிடித்தால்
இனமோதலும் மதச் சண்டைகளும் காணாமல் போகும்

இனியொரு விதி செய்வோம்
இனியாவது ஒரு விதி செய்வோம்
"நாளுக்கொரு நண்பனை தேடிப் பிடிப்போம்"

Wednesday, July 16, 2008

நட்பெனும் நயாகரா



புன்னகையும் அறிமுகமும்
ஊற்றாக உருவெடுக்க
கேலியும் கிண்டலும்
ஆறாக பெருக்கெடுக்க
சண்டையும் பிரிவுகளும்
(நீர்)வீழ்ச்சியாய் இருந்தாலும்
நமக்குள் நட்பு
கடல் போல் விரியும்....

ஆழமாக...
அழகாக..
நிரந்தரமாக...
நிச்சயமாக...


என்ன தான் முயற்சித்தாலும்
என் ஓவியங்களில்
கொண்டு வர முடிவதில்லை
நீ அவற்றை ரசிக்கும் அழகை...!