இலக்கின்றி இயங்குகின்ற இயற்கையாய் நானிருந்தேன்
கவலைகள் சுமக்காத காற்றாக நான் திரிந்தேன்
பயமின்றி மழை போல பள்ளத்துள் விழுந்தவன் நான்
வரம்பின்றி வனம் போல கண்டபடி வளர்ந்தவன் நான்
பள்ளிக்கு சாலையிலே நான் நடந்து செல்கையிலே
பட்டாம் பூச்சி கூட்டம் ஒன்று படபடத்து வந்ததடி
பட்டாம் பூச்சி கூட்டத்துள் வண்ணத்துப் பூச்சியொன்று
எனை ஈர்த்து சென்றதடி என் புருவம் உயர்ந்ததடி
நான் ரசித்த பெண்ணழகு எனை பார்த்த பொன் பொழுதில்
சுகமாய் இருந்ததென்ன என் இதயம் கரைந்ததென்ன
பார்வைப் பூ உதிர்த்துவிட்டு பூமரமே நீ கடந்தாய்
வெள்ளைத் தாள் இதயத்தில் ஓவியமே நீ படிந்தாய்
புகைப் பிடித்தால் சில நிமிடம் உற்சாகம் கிடைக்கும் என்பார்
மது குடித்தால் சிலமணிகள் சிந்தைக்குள் கிறக்கம் என்பார்
கண்மணியே உன் கருவிழிகள் என்பக்கம் திரும்பிவிட்டால்
மறுபடி நீ பார்க்கும் வரை மதுவேதும் தேவையில்லை
உன் பார்வை குளிரென்றால் கூவுகின்ற குயிலானேன்
உன் பார்வை வெயிலென்றால் மலர்கின்ற பூவானேன்
உன் பார்வை மழையென்றால் விளைகின்ற பயிரானேன்
உன் பார்வை தீயென்றால் எரிகின்ற திரியானேன்
கண்டபடி திரிந்தவனை உன் கண்ணசைவு கட்டி வைக்க
பள்ளிக்கு விடுப்பெடுக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன்
உன் பார்வை மழை என்மேலே விழக்கோரி தவம் கிடந்தேன்
சில நாள் நீ வரவில்லை உன் பார்வை வரம் தரவில்லை
நீ வாராத நாட்களில் நானாக நானில்லை
முன்போல இருப்பதற்கு என்னால் இயலவில்லை
கண்மூடி இதயத்துள் நான் பார்க்க முயலுகையில்
நேற்றைய உன் பார்வையெல்லாம் கவிதையாய் இருந்ததடி
உன் பார்வையின் சுகமென்ன எனக்கு புரிந்தது
இது தான் காதல் என் இதயம் சொன்னது
உனைப் பற்றி அறிந்ததெல்லாம் உன் பார்வை மட்டுந்தான்
தேவதையே உன் முகமும் உடலமைப்பும் மட்டுந்தான்
உனக்காக ஒரு குணத்தை நானாக உருகொடுத்தேன்
நீ பேசும் பேச்சை இதுவென்று முடிவேடுத்தேன்
ஓராயிரம் முறை உன்னை கண்களுக்குள் மணமுடித்தேன்
காதலனாய் கணவனாய் கண்களுக்குள் அடியெடுத்தேன்
வெறும் காற்றாய் இருந்தவனை இசையாக மாற்றிவிட்டாய்
பெரும்காடாய் இருந்தவனை பூங்கா ஆக்கிவிட்டாய்
எனக்குள் கவிதைகளை உன் பார்வையால் எழுதிவைத்தாய்
எனக்குள் தீபங்களை உன் கண்களால் ஏற்றி வைத்தாய்
உன்னை நான் பின் தொடர்ந்தேன் என் காதலை வெளிப்படுத்த
என் நோக்கத்தை புரிந்து கொண்டாய் முகமெல்லாம் கடுகடுக்க
என் காதலின் பிரசவத்தில் அதன் பார்வைத் தாய் இறந்தே போனாள்
நான் வரும் நேரமெல்லாம் மண்ணை பார்த்தவள் எனை மறந்தே போனாள்
உன் கண்ணோர பார்வையின்றி குருடனாய் நானானேன்
தாரகையே நீ எனைக் காண தவசியாய் நானானேன்
நீ எனைப் பார்த்து சில நாட்கள் கடந்தோடி விட்டதனால்
தேவதையே நெஞ்சுக்குள் ரகசியமாய் அழுதுவிட்டேன்
உன் மலர்விழிகள் நிலம் பார்க்க முகமெல்லாம் கடுகடுக்க
என்னை நீ கடந்து சென்றாய் எனைப் பார்க்க மறுத்துவிட்டாய்
உள் நெஞ்சில் துக்கத்துடன் முகமெல்லாம் ஏக்கத்துடன்
உன் திசை நோக்கி நின்றிருந்தேன் நீ செல்லும் வரை பார்த்திருந்தேன்....
Saturday, July 26, 2008
என்னை கடந்ததொரு மேகம்
Posted by ramesh sadasivam at 6:57 AM
Labels: flower, love poems, poetry, sunflower, tamil poems
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
//உன் மலர்விழிகள் நிலம் பார்க்க முகமெல்லாம் கடுகடுக்க
என்னை நீ கடந்து சென்றாய் எனைப் பார்க்க மறுத்துவிட்டாய்
உள் நெஞ்சில் துக்கத்துடன் முகமெல்லாம் ஏக்கத்துடன்
உன் திசை நோக்கி நின்றிருந்தேன் நீ செல்லும் வரை பார்த்திருந்தேன்....//
அருமையான வரிகள் .
காதல் தோல்வி கடைசியில்
காதலனை பாடவைக்கும் சோககீதம்
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com
Shri;
wow...nice and beautiful use of words..
நன்றி விஜய்.
Thanks prema.
இது என்ன கவிதையா இல்லை பாடலா?
கவிதை தான். சந்தத்தோடு சொல்லி பார்த்திருக்கிறேன் பாட முயற்சித்ததில்லை. பாடலாக கேட்க முடிந்தால் மகிழ்ச்சி தான்.
வணக்கம்
இன்னும் நிறைய எதிர் பார்த்து
http://loosupaya.blogspot.com
Shri;
I have a doubt..why the blog title written as 'Indha kirikken irandhuvittan'
because of poetic thoughts???
Hi Prema, These poems were written by me when I was in first year of college. Nowadays I don't write love poems any more. That's why? :) Didn't you read my introduction for this blog? It's on the right side, below view my complete profile option.
//புகைப் பிடித்தால் சில நிமிடம் உற்சாகம் கிடைக்கும் என்பார்
மது குடித்தால் சிலமணிகள் சிந்தைக்குள் கிறக்கம் என்பார்
கண்மணியே உன் கருவிழிகள் என்பக்கம் திரும்பிவிட்டால்
மறுபடி நீ பார்க்கும் வரை மதுவேதும் தேவையில்லை//
Wow! big fan!
Thanks Srivats.
''இவை எனக்கு பெருமிதத்தையும் கொடுக்கவில்லை, அவமான உணர்ச்சியும் இல்லை. நமது சிறு வயது புகைப்படங்களை பார்ப்பது போல, இந்த கவிதைகளை என் இளமைக்கால மன நிலையின் புகைப்படங்களாக கருதுகிறேன்''.
I read the above from your introduction & I can understand your mind & salute.I am thinking of you & smiling as I am the reader of your current poems.
:) Yeah, these poems bring a smile in my face too...Thanks Niru.
கண்டுபிடிச்சுட்டேன். இது தோல்வியடைந்த ஒரு தலை காதல்.
கவிதை நல்லா இருக்கு. ஆனால் சோகமா இருக்கு
அற்புதமான கவிதை
நன்றி அன்பின் நாயகன்.
I thought of them as a great achievement. In the second year of the college I was engaged in self-mutilation and started meditating after my love dreams. I shared information Vehicle towing company. It is best technology provide. Thanks for posting.
I appreciate your post
Nattu Marunthu Kadai
Nattu Marunthu Kadai Online
Post a Comment