இலக்கின்றி இயங்குகின்ற இயற்கையாய் நானிருந்தேன்
கவலைகள் சுமக்காத காற்றாக நான் திரிந்தேன்
பயமின்றி மழை போல பள்ளத்துள் விழுந்தவன் நான்
வரம்பின்றி வனம் போல கண்டபடி வளர்ந்தவன் நான்
பள்ளிக்கு சாலையிலே நான் நடந்து செல்கையிலே
பட்டாம் பூச்சி கூட்டம் ஒன்று படபடத்து வந்ததடி
பட்டாம் பூச்சி கூட்டத்துள் வண்ணத்துப் பூச்சியொன்று
எனை ஈர்த்து சென்றதடி என் புருவம் உயர்ந்ததடி
நான் ரசித்த பெண்ணழகு எனை பார்த்த பொன் பொழுதில்
சுகமாய் இருந்ததென்ன என் இதயம் கரைந்ததென்ன
பார்வைப் பூ உதிர்த்துவிட்டு பூமரமே நீ கடந்தாய்
வெள்ளைத் தாள் இதயத்தில் ஓவியமே நீ படிந்தாய்
புகைப் பிடித்தால் சில நிமிடம் உற்சாகம் கிடைக்கும் என்பார்
மது குடித்தால் சிலமணிகள் சிந்தைக்குள் கிறக்கம் என்பார்
கண்மணியே உன் கருவிழிகள் என்பக்கம் திரும்பிவிட்டால்
மறுபடி நீ பார்க்கும் வரை மதுவேதும் தேவையில்லை
உன் பார்வை குளிரென்றால் கூவுகின்ற குயிலானேன்
உன் பார்வை வெயிலென்றால் மலர்கின்ற பூவானேன்
உன் பார்வை மழையென்றால் விளைகின்ற பயிரானேன்
உன் பார்வை தீயென்றால் எரிகின்ற திரியானேன்
கண்டபடி திரிந்தவனை உன் கண்ணசைவு கட்டி வைக்க
பள்ளிக்கு விடுப்பெடுக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன்
உன் பார்வை மழை என்மேலே விழக்கோரி தவம் கிடந்தேன்
சில நாள் நீ வரவில்லை உன் பார்வை வரம் தரவில்லை
நீ வாராத நாட்களில் நானாக நானில்லை
முன்போல இருப்பதற்கு என்னால் இயலவில்லை
கண்மூடி இதயத்துள் நான் பார்க்க முயலுகையில்
நேற்றைய உன் பார்வையெல்லாம் கவிதையாய் இருந்ததடி
உன் பார்வையின் சுகமென்ன எனக்கு புரிந்தது
இது தான் காதல் என் இதயம் சொன்னது
உனைப் பற்றி அறிந்ததெல்லாம் உன் பார்வை மட்டுந்தான்
தேவதையே உன் முகமும் உடலமைப்பும் மட்டுந்தான்
உனக்காக ஒரு குணத்தை நானாக உருகொடுத்தேன்
நீ பேசும் பேச்சை இதுவென்று முடிவேடுத்தேன்
ஓராயிரம் முறை உன்னை கண்களுக்குள் மணமுடித்தேன்
காதலனாய் கணவனாய் கண்களுக்குள் அடியெடுத்தேன்
வெறும் காற்றாய் இருந்தவனை இசையாக மாற்றிவிட்டாய்
பெரும்காடாய் இருந்தவனை பூங்கா ஆக்கிவிட்டாய்
எனக்குள் கவிதைகளை உன் பார்வையால் எழுதிவைத்தாய்
எனக்குள் தீபங்களை உன் கண்களால் ஏற்றி வைத்தாய்
உன்னை நான் பின் தொடர்ந்தேன் என் காதலை வெளிப்படுத்த
என் நோக்கத்தை புரிந்து கொண்டாய் முகமெல்லாம் கடுகடுக்க
என் காதலின் பிரசவத்தில் அதன் பார்வைத் தாய் இறந்தே போனாள்
நான் வரும் நேரமெல்லாம் மண்ணை பார்த்தவள் எனை மறந்தே போனாள்
உன் கண்ணோர பார்வையின்றி குருடனாய் நானானேன்
தாரகையே நீ எனைக் காண தவசியாய் நானானேன்
நீ எனைப் பார்த்து சில நாட்கள் கடந்தோடி விட்டதனால்
தேவதையே நெஞ்சுக்குள் ரகசியமாய் அழுதுவிட்டேன்
உன் மலர்விழிகள் நிலம் பார்க்க முகமெல்லாம் கடுகடுக்க
என்னை நீ கடந்து சென்றாய் எனைப் பார்க்க மறுத்துவிட்டாய்
உள் நெஞ்சில் துக்கத்துடன் முகமெல்லாம் ஏக்கத்துடன்
உன் திசை நோக்கி நின்றிருந்தேன் நீ செல்லும் வரை பார்த்திருந்தேன்....
Saturday, July 26, 2008
என்னை கடந்ததொரு மேகம்
Posted by ramesh sadasivam at 6:57 AM 18 comments
Labels: flower, love poems, poetry, sunflower, tamil poems
Monday, July 21, 2008
உன்
காயங்களுக்கு
மருந்தளிக்கவே
காத்திருக்கும்...
என் கைகள்...!
நீ
மருந்தளிக்கவே
காத்திருக்கும்
என் காயங்கள்...!
Posted by ramesh sadasivam at 11:23 AM 3 comments
Labels: love poems, tamil, tamil poems, tamil poetry
Friday, July 18, 2008
உன் வார்த்தைகளில்
தொலைந்த மௌனமோ...
நீ பார்த்ததில்
கரைந்த காட்சியோ...
உன் மென்மையில்
உடைந்த பலமோ...
அல்லது
நீ மறுத்ததில்
கிடைத்த புதையலோ...
உனக்காக கிடக்கிறது
எந்தன் நெஞ்சில்!
Posted by ramesh sadasivam at 3:30 AM 4 comments
Posted by ramesh sadasivam at 3:13 AM 4 comments
Labels: illusion, love poems, man flying, tamil
Posted by ramesh sadasivam at 3:10 AM 0 comments
Labels: angel, beautiful angel, tamil, tamil poetry
இனியொரு விதி செய்வோம்
நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எழுதியது
இறைவன் அருளால் உயிர் பெற்றோம்
அவனது அன்பால் உருவுற்றோம்
சிந்தனை என்னும் திறன் பெற்றோம்
புன்னகை என்னும் வரம் பெற்றோம்
குயில்களுக்கு இசை புரியும்
நாய்களுக்கு மோப்பம் தெரியும்
மயில்கள் எல்லாம் நடனம் முயலும்
நம்மால் மட்டுமே புன்னகை இயலும்
உழைத்து சேர்ப்பதை எறும்புகள் புரியும்
தின்று கொழுப்பதை பன்றிக்கும் முடியும்
பகைவனை அழிப்பதை மிருகங்கள் செய்யும்
மனிதர்கள் நாம் நண்பர்கள் செய்வோம்
தோல்வி இன்றி இறப்பவன் சாதனையாளன்
வறுமை இன்றி இறப்பவன் உழைப்பாளி
ஆசையின்றி இறப்பவன் ஞானியாவான்
பகைவனின்றி இறப்பவன் இறைவனாவான்
ஊருக்கும் உலகுக்கும்
நண்பனாய் வாழ்ந்து நண்பனாய் இறப்போம்
நட்பை வளர்த்து நண்பர்கள் சேர்ப்போம்
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது அவசியம்
அதை விட அவசியம்
"நாளுக்கொரு நண்பனை தேடிப் பிடிப்பது"
நாளுக்கொரு நண்பனை தேடிப் பிடித்தால்
இனமோதலும் மதச் சண்டைகளும் காணாமல் போகும்
இனியொரு விதி செய்வோம்
இனியாவது ஒரு விதி செய்வோம்
"நாளுக்கொரு நண்பனை தேடிப் பிடிப்போம்"
Posted by ramesh sadasivam at 1:30 AM 2 comments
Labels: friendship, pussy cat, tamil poetry, tanmil prose
Wednesday, July 16, 2008
நட்பெனும் நயாகரா
புன்னகையும் அறிமுகமும்
ஊற்றாக உருவெடுக்க
கேலியும் கிண்டலும்
ஆறாக பெருக்கெடுக்க
சண்டையும் பிரிவுகளும்
(நீர்)வீழ்ச்சியாய் இருந்தாலும்
நமக்குள் நட்பு
கடல் போல் விரியும்....
ஆழமாக...
அழகாக..
நிரந்தரமாக...
நிச்சயமாக...
Posted by ramesh sadasivam at 10:22 PM 2 comments
Posted by ramesh sadasivam at 12:00 AM 6 comments
Tuesday, July 15, 2008
உன்னை
பார்க்கும் போதெல்லாம்
என் மனம்
தொலைந்து போகிறது....
திரும்ப கிடைக்கும்
பொழுது...
உன்னை போலவே
ஒரு கவிதையுடன்..!
Posted by ramesh sadasivam at 11:53 PM 6 comments
Posted by ramesh sadasivam at 11:50 PM 8 comments
Posted by ramesh sadasivam at 11:30 PM 3 comments
Sunday, July 13, 2008
இது நாள் வரை...
நான் ரசிகன்
நம் வயது பெண்களுக்கு
நிறமுடைய பூக்களுக்கு
தொட்டுச்செல்லும் தென்றலுக்கு
தொடர்ந்து வரும் பாடலுக்கு
இப்பொழுதெல்லாம்
இவை எதுவும்
எனக்குப் பிடிக்கவில்லை
ஆனாலும் நான் ரசிகன்
நீ தந்த காதலுக்கு
தினம் உதிர்க்கும் பார்வைக்கு
மனம் உயிர்க்கும் புன்னகைக்கு
நான் காதலிக்கும் உனக்கு
உன்னை காதலிக்கும் எனக்கு
Posted by ramesh sadasivam at 6:05 AM 2 comments
நினைவில் தொலைந்து
கனவில் கண்டெடுத்த
கவிதை போல
பகலில் தொலைந்து
நிலவொளியில் கண்டெடுத்த
விண்மீன் போல
உனக்குள் தொலைந்து
எனக்குள் கண்டெடுத்த
என் காதல்....
Posted by ramesh sadasivam at 5:59 AM 2 comments
Posted by ramesh sadasivam at 5:36 AM 2 comments
Friday, July 11, 2008
கனவே கலையாதே
கனவே கலையாதே
என் கண்ணுக்குள் என்றாலும்
என் கண்மணியை
என்னோடு வாழ வைத்தாய்...!
உச்சி முதல்
உள்ளங்கால் வரை
ரசிக்க வைத்தாய்
ருசிக்க வைத்தாய்
நான் தோற்ற போதெல்லாம்
என் முகம் அவள் மடி
புதைக்க வைத்தாய்
நான் வென்ற போதெல்லாம்
என்னை அவள்
அணைக்க வைத்தாய்
அவள் மடி போதுமென்று நானும்
என் தோள் பொதுமென்று அவளும்
காலமெல்லாம் வாழ வைத்தாய்
நான் காதல் கொண்ட போதெல்லாம்
அவள் வெட்கப்படுவதும்;
கோபம் கொண்ட போதெல்லாம்
என்னை அணைத்துக் கொள்வதும்
அவள் கோபம் கொண்ட போதெல்லாம்
நான் அசடு வழிவதும்
காதல் கொண்ட போதெல்லாம்
மயக்கம் கொள்வதும்
கனவே நீ எனக்கு கொட்டித் தந்தது ஏராளம்
இன்று என் கையில்
அவள் தந்த திருமண அழைப்பிதழில்
என் ஒரு தலை ராகம்
மௌன ராகமாகி விட்டது
இதற்கு ஆறுதல்
நீ மட்டும் தானே
கனவே கலையாதே
Posted by ramesh sadasivam at 4:43 AM 2 comments
Posted by ramesh sadasivam at 4:18 AM 3 comments
Thursday, July 10, 2008
Wednesday, July 9, 2008
நீ
பார்த்திருந்தால்
காதலில்லை...!
பார்த்திராவிட்டால்
சாதல் இல்லை...!
பார்த்தும் பார்க்காமல்
பார்க்காமல் பார்க்கிறாய்
அது தான்
கண்ணுக்குள் தூசி போல
நெஞ்சுக்குள் உறுத்துதடி...!
Posted by ramesh sadasivam at 7:18 AM 2 comments
Posted by ramesh sadasivam at 7:02 AM 2 comments
Posted by ramesh sadasivam at 6:38 AM 2 comments
Labels: art, beautiful paintings, love poems, paintings, pictures, poem, poetry, tamil, tamil poems, tamil poetry, woman, women
Posted by ramesh sadasivam at 6:13 AM 2 comments
Labels: art, beautiful paintings, love poems, paintings, pictures, poem, poetry, tamil, tamil poems, tamil poetry