கனவே கலையாதே
என் கண்ணுக்குள் என்றாலும்
என் கண்மணியை
என்னோடு வாழ வைத்தாய்...!
உச்சி முதல்
உள்ளங்கால் வரை
ரசிக்க வைத்தாய்
ருசிக்க வைத்தாய்
நான் தோற்ற போதெல்லாம்
என் முகம் அவள் மடி
புதைக்க வைத்தாய்
நான் வென்ற போதெல்லாம்
என்னை அவள்
அணைக்க வைத்தாய்
அவள் மடி போதுமென்று நானும்
என் தோள் பொதுமென்று அவளும்
காலமெல்லாம் வாழ வைத்தாய்
நான் காதல் கொண்ட போதெல்லாம்
அவள் வெட்கப்படுவதும்;
கோபம் கொண்ட போதெல்லாம்
என்னை அணைத்துக் கொள்வதும்
அவள் கோபம் கொண்ட போதெல்லாம்
நான் அசடு வழிவதும்
காதல் கொண்ட போதெல்லாம்
மயக்கம் கொள்வதும்
கனவே நீ எனக்கு கொட்டித் தந்தது ஏராளம்
இன்று என் கையில்
அவள் தந்த திருமண அழைப்பிதழில்
என் ஒரு தலை ராகம்
மௌன ராகமாகி விட்டது
இதற்கு ஆறுதல்
நீ மட்டும் தானே
கனவே கலையாதே
Friday, July 11, 2008
கனவே கலையாதே
Posted by ramesh sadasivam at 4:43 AM
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
:'(
சும்மா ஒரு patho touch கொடுக்கலாம் என நினைத்தேன்... பிடிக்கவில்லை போல் இருக்கிறது...
Post a Comment